அனைத்து பெண் மற்றும் கணவனுக்கும் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கருவில் வளரும் குழந்தை முதன் முதலாக உதைப்பதை உணர்வது. எத்தனை காசு கொடுத்தாலும், இந்த தருணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் கிடைக்கவே கிடைக்காது என்பது தான் உண்மை.
ஆனால், கருவில் சிசு உதைப்பதற்கும், சிசுவின் ஆரோக்கியம், வளர்ச்சி, நகரும் தன்மைக்கும் கூட நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒருவேளை கர்ப்பிணி பெண்ணின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் சிசு நகர்தலில் குறைபாடுகள் இருக்கும். இதனால், சிசு உதைப்பது மிக அரிதாக ஏற்படலாம்.
குழந்தை உதைப்பது போன்ற முதல் உணர்வு 18 - 25 வது வாரத்தின் போது தான் ஏற்படும்.
இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்த பெண்கள் இந்த காலக்கட்டத்திற்கு முன்பே குழந்தைகள் உதைப்பதை உணர்ந்து விடுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ 13வது வாரத்தில் உதைக்கும் உணர்வை உணர்கின்றனர்.
தாயின் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது, சிசுவின் செயல்பாடு மற்றும் நகரும் தன்மையிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பொதுவாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைக்குள் இந்த மாற்றம் ஏற்படலாம்.
இடது பக்கமாக படுத்து உறங்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், சிசுவிடம் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும் எனவும், உதைகள் நிறையவே கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உங்கள் குழந்தை உதைப்பதன் எண்ணிக்கையை வைத்தே குழந்தை எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறது என அறிந்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் உண்ணும் உணவுக்கும், குழந்தை உதைக்கும் எண்ணிக்கைக்கும் கூட தொடர்பு இருக்கிறதாம். சில உணவுகள் கருவில் சிசுவின் நகர்வை ஊக்கப்படுதுமாம். இதனால், உதைகள் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
36வது வாரத்தின் போது ஏறத்தாழ குழந்தை முழுவதுமாக வளர்ந்திருக்கும். இதனால், சிசுவால் உதைக்க முடியாது. உதைக்கும் எண்ணிக்கை குறையும்.
ஆனால், கருவில் சிசு உதைப்பதற்கும், சிசுவின் ஆரோக்கியம், வளர்ச்சி, நகரும் தன்மைக்கும் கூட நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒருவேளை கர்ப்பிணி பெண்ணின் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் சிசு நகர்தலில் குறைபாடுகள் இருக்கும். இதனால், சிசு உதைப்பது மிக அரிதாக ஏற்படலாம்.
குழந்தை உதைப்பது போன்ற முதல் உணர்வு 18 - 25 வது வாரத்தின் போது தான் ஏற்படும்.
இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்த பெண்கள் இந்த காலக்கட்டத்திற்கு முன்பே குழந்தைகள் உதைப்பதை உணர்ந்து விடுவார்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏறத்தாழ 13வது வாரத்தில் உதைக்கும் உணர்வை உணர்கின்றனர்.
தாயின் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது, சிசுவின் செயல்பாடு மற்றும் நகரும் தன்மையிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. பொதுவாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைக்குள் இந்த மாற்றம் ஏற்படலாம்.
இடது பக்கமாக படுத்து உறங்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், சிசுவிடம் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும் எனவும், உதைகள் நிறையவே கிடைக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உங்கள் குழந்தை உதைப்பதன் எண்ணிக்கையை வைத்தே குழந்தை எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறது என அறிந்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் உண்ணும் உணவுக்கும், குழந்தை உதைக்கும் எண்ணிக்கைக்கும் கூட தொடர்பு இருக்கிறதாம். சில உணவுகள் கருவில் சிசுவின் நகர்வை ஊக்கப்படுதுமாம். இதனால், உதைகள் அதிகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
36வது வாரத்தின் போது ஏறத்தாழ குழந்தை முழுவதுமாக வளர்ந்திருக்கும். இதனால், சிசுவால் உதைக்க முடியாது. உதைக்கும் எண்ணிக்கை குறையும்.